அந்தியூரில் இருந்து அத்தாணி, கள்ளிப்பட்டி வழியாக கணக்கம்பாளையம் மற்றும் டிஎன்பாளையம் செல்வதற்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் 2012-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தற்போது வரை இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சில் சென்று வந்த பொதுமக்கள் பஸ் வசதி இன்றி தவித்து வருகிறார்கள். மீண்டும் அந்தியூர்-டிஎன்.பாளையம் இடையே பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வருவார்களா?