கரூர் மாவட்டம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு அருகில் பிரிவு சாலையின் தடுப்பு மேல் சிக்கனல் விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கம்பம் சாந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்லும்போது இந்த சிக்னல் கம்பம் சாலையில் விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.