கோத்தகிரி பகுதியில் இயக்கப்படும் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக சத்தம் எழுப்புகின்றன. இது பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது. மேலும் நோயாளிகளும், முதியவர்களும் கடும் சிரமப்படுகின்றனர். அத்துடன் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே பஸ்களில் ஏர் ஹாரன்களை அகற்றவும், தடையை மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.