புதர்மண்டிய நிழற்குடை

Update: 2025-06-22 11:38 GMT

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிழற்குடையை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் விஷஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், மதுப்பிரியர்கள் பலரும் இந்த நிழற்குடையில் அமர்ந்து பகலிலேயே மது அருந்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்