ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்

Update: 2025-06-15 11:50 GMT

அரியலூர் நகரில் உள்ள மாதா கோவில் பகுதி அருகேயுள்ள சாலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு வேலை நடைபெற்றது. இதையடுத்து சாலை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் அதிகளவில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் பலர் காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்