அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முதல் முத்துசேர்வாமடம் வழியாக செல்லும் இளைய பெருமாள் நல்லூர் வரை உள்ள சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேகத்தடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக செல்லும் 108 ஆம்புலன்சுகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.