புதிய பாலம் அமைக்கப்படுமா?

Update: 2025-06-08 09:46 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகைப் பகுதியில் பொன்னாற்றின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நடக்கும்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்