வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-06-08 09:45 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையின் வளைவு பகுதியில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டுமென்ற காரணத்தினால் இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக வளைவில் திரும்புவதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அகற்றப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்