திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலை ஓரத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் சாலையோரம் இரவு நேரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் டவுன் பஸ்கள் திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும்போது, அவர்கள் பெரிதும் அவதிப்படுவதுடன் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ரெயில் பயணிகள் சாலையை கடக்கும்போது பஸ் நிற்பதை கவணிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.