நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இருக்கைகள் பெயரளவில் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர். பெண்கள் பஸ்சில் ஏறும்போது இருக்கைகள் வழங்க முன்வருவது இல்லை. இதனால் அவதி அடையும் பெண்கள், பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயணித்து வருகின்றனர். எனவே பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அவர்களே பயணம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.