நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, பேய்குளம் வழியாக சாத்தான்குளத்துக்கு தினமும் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் அரசு பஸ் வாரத்தில் சில நாட்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வரும் பயணிகள் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். எனவே பஸ்சை தினமும் சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.