மதுரை கீழமாசி வீதியில் தேருக்கு அருகில் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்கள் அதிகளவில் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்படுகிறது. மேலும் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?