செம்புளிச்சாம்பாளையம் - பிரம்மதேசம் சாலை வழியாக தினமும் பஸ், கார், லாரி, வேன் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்தியூரில் ஏதேனும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் இதன் வழியாகவே அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். எனவே அனைத்து வாகனங்களும் சென்றுவரும் வகையில் இந்த சாலையை இன்னும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.