அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதன்காரணமாக இந்த பகுதியானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலையில் ஒரு வளைவு பகுதி உள்ளது. இந்த பகுதி மிகவும் ஆபத்து நிறைந்ததாகவும், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. பல வாகனங்கள் இந்த வளைவில் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வாகன ஓட்டிகள் பலரும் அச்சத்துடனேயே இந்த சாலைகளை கடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே இந்த பகுதியில் போதுமான அளவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.