போக்குவரத்து நெரிசல்

Update: 2025-03-30 15:30 GMT

மதுரை தெற்கு வெளி வீதி பஸ் நிறுத்தம் பகுதியில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் மற்றும் அவ்வழியே நடந்த செல்லும் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு  ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

பஸ் வசதி