அந்தியூரில் இருந்து கோபிக்கு காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 2 மணி நேரத்துக்கு பஸ் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தினமும் காலையில் தனியார் மற்றும் புறநகர் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. எனவே அனைவரின் நலன்கருதி அந்தியூரில் இருந்து கோபிக்கு கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.