அரியலூர்-திருச்சி நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் குரைத்துக்கொண்டே கடிக்க பாய்கின்றன. இதன்காரணமாக பலரும் அச்சத்தில் செல்லும் சூழல் உள்ளது. மேலும் வாகனங்களின் குறுக்கே ஓடும் தெருநாய்களின் காரணமாக வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.