அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வாழைக்குறிச்சி ஊராட்சி மதனத்தூர்-கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.