மதுரை பெரியார் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பாலத்தில் இருந்து வரும் சில வாகனங்கள் போக்குவரத்து சிக்னலை மீறி செல்கின்றன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே போக்குவரத்து போலீசார் சிக்னலை மீறி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.