அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து பொண்ணாடத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பொண்ணாடத்திற்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் அந்த பஸ் பெண்ணாடத்திற்கு வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பஸ்சை முறையாக இயக்கவும், கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.