கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-09-01 11:28 GMT

அரியலூரில் இருந்து வி.கைகாட்டி விக்கிரமங்கலம் வழியாக முத்துவாஞ்சேரி வரை இரண்டு நகர பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த 2 பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மக்கள் பெருக்கத்திற்கு தகுந்தார்போல பஸ்கள் கூட்டப்படாததால் இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் அதிக கூட்டத்தோடு செல்கின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்