பஸ்வசதி வேண்டும்

Update: 2024-07-14 10:18 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு பாபநாசம்-கும்பகோணம் வழித்தட பஸ் இயக்கப்பட்டது. இதனால் திருக்கருக்காவூர்,ஏரி,கோவிந்தங்குடி வலங்கைமான், ஆவூர் , ஏரி, ஊத்துக்காடு,வெள்ளகுடி,வேளாகுடி,வீரமங்கலம்,ஆலத்தூர், மணலூர்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்தனர். வலங்கைமான், பாபநாசம் பகுதியை இணைக்கும் வகையில் போதிய பஸ் வசதி இல்லை. அந்த பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பாபநாசம்-கும்பகோணம் வழித்தட பஸ்சும் முறையாக இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களின் நலன் கருதி ஆய்வு மேற்கொண்டு போதிய பஸ் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்