சாலையில் சுற்றும் மாடுகள்

Update: 2024-07-07 12:56 GMT

அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட நூலகம் ஆகியவைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தினமும் இரவு நேரங்களில் அதிக அளவில் கூட்டமாக மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே சாலையில் நிற்கிறது. மேலும் இவ்வழியே அதிக அளவில் அடிக்கடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் சென்று வருகிறது. மாடுகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக நிற்பதால் 108 ஆம்புலன்சில் விபத்துகளில் அடிபட்ட நபர்கள் மற்றும் நோயாளிகளை ஏற்றி வரும் போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் நீண்ட நேரம் சாலையிலே நிற்கிறது. மேலும் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நிம்மதியாக செல்ல முடியவில்லை. சாலையின் ஓர பகுதியில் சென்டர் மீடியனை ஒட்டி படுத்திருக்கும் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடி வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்