பஸ் வசதி வேண்டும்

Update: 2024-06-30 11:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம், அம்பாபூர், செங்குழி கடம்பூர், மழவராயநல்லூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவிலான மாணவிகள் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் செல்வதற்கு ஒரே பஸ் இல்லாததால், காலை வேலைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் மாறிச்செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விக்கிரமங்கலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு நகர பஸ் காலை மற்றும் மாலை வேலைகளில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்