ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2024-06-23 18:11 GMT
வடலூரில் உள்ள கும்பகோணம்- சென்னை செல்லும் பிரதான சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. ரெயில் வரும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட் மூடப்படும்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பின்னர் ரெயில்வே கேட் திறந்தாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் அங்கிருந்த செல்ல நீண்ட நேரம் ஆகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்