ஆபத்தான இரும்பு கம்பம்

Update: 2024-06-16 11:31 GMT

திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், சாலையின் குறுக்கே குறைந்த உயரம் கொண்ட இரும்பு கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த இரும்பு கம்பத்தின் மீது வாகனங்கள் மோதி தற்போது சாய்ந்த நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்லும்போது இந்த கம்பம் கீழே விழுந்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்