பஸ்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுமா?

Update: 2024-05-12 17:29 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் போது பின்னர் அங்கிருந்து கிளம்பி வரும்போது பஸ்களுக்கு பயணிகளை ஏற்றி இறங்குவதில் பலத்த போட்டி போடுகின்றனர். இதனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் அதிவேகமாக சென்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சி தபால் நிலையம் பகுதியில் தனியார் பஸ்கள் ஒன்றோடு, ஒன்று போட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகி, சாலையோரம் இருந்த சிக்னல் சேதமடைந்தது. மேலும், குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் நிற்காமல், இடைவெயில் எங்கு பயணிகள் நிறுத்தினால், தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுக்கின்றனர். சில பயணிகள் அவசர கதியில் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்