அகற்றப்பட்டது

Update: 2024-05-12 07:38 GMT

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிபள்ளத்துக்கு செல்லும் சானல்கரை சாலையில் ஒரு கிறிஸ்வத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிரே சாலையின் ஒரு பகுதியில் கேரள பதிவெண் கொண்டு கார் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் நின்றது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை அப்புறப்படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்