போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-04-28 12:07 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சில லாரிகளில் வரம்புக்கு மீறி அதிக பாரத்துடன் 24 மணி நேரமும் இயங்குவதால் சாலைகளும் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வாகன தணிக்கை செய்யும், வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்