போக்குவரத்து இடையூறு

Update: 2024-04-28 12:04 GMT

கோத்தகிரி மார்க்கெட் திடலில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் செல்லும் குறுகிய சாலையோரத்தில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் அங்குள்ள நடைபாதையில் பல்வேறு பொருட்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்