பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2024-04-21 12:39 GMT

சிவகங்கை மாவட்டம் கண்டனிப்பட்டி கிராமத்தில் பல மாதங்களாக நிழற்குடை வசதி இல்லை. இதனால் கடும் வெயில் மற்றும் மழை காலகட்டங்களில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர்கள் வெயிலில் நிற்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்