அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

Update: 2024-03-31 13:08 GMT

அரியலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் சர்வீஸ் சாலையில் சென்று வரும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக வந்து செல்கின்றன. இதனால் சாலையோரம் நடந்து செல்பவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் வேக கட்டுப்பாடு விதிக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி