போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-03-31 10:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம், காயரம்பேடு செல்லும் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனத்தை நிறுத்தி வைக்கப்படுகிறது. குறிப்பாக காயரம்பேடு கூட்டுசாலை பகுதியில் பள்ளி ஒன்று உள்ளது. எனவே, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்