அந்தியூர் அருகே உள்ள தாசநாயக்கம்பாளையம் என்ற ஊருக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கூட மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மக்களின் நலன் கருதி மேற்கண்ட வழி தடத்தில் பஸ்கள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?