பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-03-17 17:33 GMT
அரசூர் கூட்டுரோட்டில் உள்ள விழுப்புரம் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் நின்று அவதி அடைந்து வருகின்றனர். அதே போல் மழையின்போது அங்கு நிற்கமுடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்