நிழற்குடை வேண்டும்

Update: 2024-02-11 12:24 GMT

ெபாள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி காந்திபுரம் பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும், கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்கள், கால் கடுக்க நிற்கும் முதியவர்களின் அவதியை சொல்லி மாளாது. எனவே அவர்களது அவதி தீர அந்த பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்