பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள்

Update: 2024-02-04 16:16 GMT

வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒழுங்கற்ற முறையில் நின்று செல்கின்றன. மேலும் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசு பஸ்கள்,  பஸ் நிலையத்திற்கு வெளியிலேயே நின்று செல்கின்றன. இதனால்  பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்களை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்