பொதுமக்கள் அவதி

Update: 2024-02-04 08:07 GMT

ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் சுபாஷ்நகர் ெரயில்வே பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. தற்பொழுது பணிகள் பாதியில் நிற்கிறது. இதனால் குமாரபுரம், சுபாஷ்நகர் தொழிற்பேட்டையில் உள்ள காற்றாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரல்வாய்மொழிக்கு செல்வதற்கு பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணியை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆரல்வாய்மொழி.

மேலும் செய்திகள்