பஸ் வசதி வேண்டும்

Update: 2024-01-28 13:55 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கிராமத்தில் இருந்து திருவாரூர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். திருவாஞ்சியம் கிராமத்துக்கு இயக்கப்படும் பஸ்சும் உரிய நேரத்துக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லும் முதியவர்கள் பஸ் இல்லாமல் நடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்