வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பஸ் நிறுத்தம்

Update: 2024-01-14 17:14 GMT
வடலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை டிரைவர்கள் நிறுத்தாமல் அங்குள்ள மெயின்ரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்களை பலர் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக பஸ் நிறுத்தும் இடம் தற்போது இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்