கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2024-01-07 15:29 GMT
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர்திருக்கை வரை ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள விழுப்புரம் சென்று வர முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்