பஸ் நிறுத்தம் தேவை

Update: 2023-12-31 10:53 GMT

திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி திருத்துறைப்பூண்டி சாலையில் வாளவாய்க்கால் பஸ் நிறுத்தம் இருந்தது. இந்த பஸ் நிறுத்தம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக பஸ் நிறுத்தம் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் பயணிகள் காத்துநிற்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்