போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-12-24 12:40 GMT

கோத்தகிரி புயல் நிவாரண கூடம் அருகே உள்ள கோழி இறைச்சி கடைகளுக்கு கோழிகளை வினியோகம் செய்ய வரும் வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியாக தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்