ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-12-17 10:52 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் இந்த ரெயில்வே கேட் வழிய ரெயில்கள் செல்லும்போது ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்