பஸ் வசதி வேண்டும்

Update: 2023-10-08 15:15 GMT

அந்தியூர்-கோபி இடையே இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் கடந்த சில மாதங்களாக காலை, மாலை மட்டும் அத்தாணி வரை இயக்கப்படுகிறது. கோபி இடையே 4 டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் காலையிலும், மாலையிலும் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள், இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மீண்டும் கோபி வரை அரசு பஸ்சை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்