போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-10-01 13:26 GMT

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் கால்நடைகள் கூட்டமாக சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்