அரசு பஸ்சை 2 முறை இயக்க வேண்டும்

Update: 2022-12-14 12:35 GMT

ஆற்காடு பணிமனைக்கு உட்பட்ட தடம் எண்:487 என்ற அரசு பஸ் வேலூரில் இருந்து அரக்கோணம் வரை தினமும் காலை, மாலை என 2 முறை இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு அந்தப் பஸ் காலை ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாலை இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இயக்கியபடி காலை, மாலை என 2 முறை அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சுரேஷ், போளிப்பாக்கம்.  

மேலும் செய்திகள்

பஸ்வசதி