நேரடி பஸ் வசதி

Update: 2024-07-14 20:52 GMT

சோளிங்கரை அடுத்த பரவத்தூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்குள்ளவர்கள் சென்னை செல்ல அரக்கோணம் சென்று அங்கிருந்து சென்னை பஸ்களில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சென்னையில் இருந்து திரும்பி அரக்கோணம் வந்தால், அங்கிருந்து பரவத்தூர் வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பரவத்தூருக்கு நேரடி பஸ் வசதியை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும்.

-பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும் செய்திகள்