சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து

Update: 2022-12-21 20:12 GMT

ராணிப்பேட்டை நகரில் எம்.பி.டி. ரோடு, கிருஷ்ணகிரி ரோடு, காந்தி ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் முக்கிய தெருக்களில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, சாலைகளில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. மேலும் சில சமயங்களில் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்