பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-08-13 14:13 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு காலை 6.20, 6.55 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். புறநகர் மற்றும் தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ய வேண்டிய அவலநிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 8 மணிக்கு மேல் 8.25 மணிக்கு மேற்கண்ட வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்